ஹட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம்

- 50 குடும்பங்கள் பாதிப்பு; ஜீவன் நேரில் சென்று பார்வை

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று முன்தினம் (17) மாலை பெய்த கடும் மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும் கடைகளுக்கும் உட்புகுந்ததால் 50குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். 

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு அவர்கள் மீண்டும் சென்று விட்டனர். 

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.  எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயத்தை நேற்றுமுன்தினம்  இரவு மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.   

Mon, 04/19/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை