அஸ்ட்ரா செனகா 02 ஆவது டோஸ் வழங்கல் ஆரம்பம்

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டம் நேற்றுமுதல் நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  

சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் உட்பட முன்னுரிமை அடிப்படையில் கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஆரம்பமானது.  

முதல்கட்டமாக 09இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களில் முன்னுரிமை அடிப்படையில் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு நேற்றுமுதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகியது.

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியே இவர்களுக்கு இரண்டாவது டோஸாகவும் வழங்கப்படுகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் ​  

 

Thu, 04/29/2021 - 08:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை