இன்றிரவு ஒரு சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தென், வடமேற்கு, மேல் மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் ஒரு சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக கடும் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களுக்கு மாலை மற்றும் இரவு வேளையில் இவ்வாறு மழைக்கான வானிலை காணப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
from tkn