மட்டு. சுழற்சி முறை உண்ணாவிரதம்; ஆறாவது நாளாக நேற்றும் முன்னெடுப்பு

சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராடடம் 03.03.2021புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 03/09/2021 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை