எத்தியோப்பியாவில் 80 பேர் படுகொலை

மேற்கு எத்தியோப்பியாவில் இனரீதியான படுகொலைகளின் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை கிராமம் ஒன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் குழந்தைகள் உட்பட 80 பேரை கொன்றுள்ளனர்.

சூடான் மற்றும் தென் சூடான் எல்லையை ஒட்டி இருக்கும் பெனிசென்குல்–குமுஸ் பிராந்தியத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எத்தியோப்பி மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குமுஸ் இனத்தைச் சேர்ந்த குழு ஒன்று துப்பாக்கி மற்றும் வாளுடன் வந்து இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் அம்ஹராஸ் மற்றும் அகவ்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பிராந்தியத்தில் சிறுபான்மையாக உள்ளனர்.

கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வாறான தாக்குதல் ஒன்றில் 207 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/15/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை