காலி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் 26 பாடசாலைகளைச் சேர்ந்த 43 மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிராந்திய தொற்று நோய் வைத்தியர் வெணுரகே சிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 38 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்றுக்குள்ளான அதிக எண்ணிக்கையான மாணவர்கள் போபோ, பொத்தளை சுகாதராப் பிரிவிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களாவர். இந்தப் பிரதேசத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Thu, 01/28/2021 - 14:24
from tkn