எமக்கென்று வாக்களிக்கப்பட்ட எமது பூமி நித்திய வெளிச்சத்தில் விடியட்டும்

அமைச்சர டக்ளஸ் நத்தார் தின வாழ்த்து செய்தி

உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசுபாலன் பிறப்பெடுத்த நத்தார் தினத்தின் வருகையில் நித்திய வெளிச்ச ஒளி எம் தேசமெங்கும் வீசி விடியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில், இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி. யாரும் யாருக்கும் அடிமைமைகள் என்றில்லாத எமது உரிமையை வெல்லும் திசை நோக்கி எமது மக்களை வழி நடத்தி செல்லவே நாம் இந்த பூமிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். எமது நிலங்கள் யாவும் எமது மக்களுக்கே சொந்தம். எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும்இ எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும். எமது மக்களின் நியாயமான உணர்வுகளை ஏற்று நாம் என்றும் பரிசுத்தமாகவே உழைத்து வருகின்றோம். ஆகவேதான், துயரச்சிலுவைகளை எமது மக்கள் சுமந்து நடந்த இரத்தப்பலிகளுக்கு மத்தியிலும், அடுத்தவர்களை போல் எமது மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் எமது மக்களுடனேயே நீரில் வாழும் மீன்களைப்போல் இடையறாது நாமும் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

முட்களிலும் கற்பாறைகளிலும் நடந்து வதைபட்ட எமது மக்களின் பாதங்களின் வலி தடவி, பசுந்தரையின் பாதை நோக்கி அவர்களை அழைத்துவர நாம் அயராது உழைத்து வந்திருக்கிறோம். எமது மக்களை நேசித்து நாம் கட்டியெழுப்ப நினைக்கும் சமத்துவ சமாதான கனவுகளுக்காக நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும், கொள்கைகளும், அதற்கான யதார்த்த பூர்வமான நடைமுறைகளும், எமது தீர்க்கதரிசனங்களும் மழை நீரால் அரித்துச் செல்லப்படும் மணல் மீது இடப்பப்பட அத்திவாரங்கள் அல்ல.

மாறாக எந்த காட்டாற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கல்மலைகள் மீதே எமது கொள்கைகளின் அத்திவாரங்களை நாம் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

Fri, 12/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை