கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் பாகுபாடு

கறுப்பினத்தவர் மரணம்   

கறுப்பினத்தவர் என்பதால் தமக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் கூறிய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் இது நடந்துள்ளது.

சூசன் மோர் என்ற அந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 'இன்டியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தமக்கு சிகிச்சை அளிக்கும்படி யாசிக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.

சூசன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இண்டியானா பொலிஸ் மருத்துவமனை, பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை தாங்கள் மிக முக்கிய பிரச்சினையாக கருதுவதாகவும், ஆனால் ஒரு குறிப்பிட்ட நோயாளியைப் பற்றி எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. வெள்ளை இன மக்களை விட கறுப்பின மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Sat, 12/26/2020 - 19:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை