80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பாணந்துறை - ஹொரணை வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கொரோனா தொற்றாளர்கள் பலர் கண்டறியப்பட்டதுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் 80 தொழிலாளர்கள் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியிருப்பதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார

பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் பின் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு அதனையடுத்து அத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களும் பீ.சீ.ஆர்.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மேற்படி 80 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Thu, 12/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை