தஞ்சக் கோரிக்கையாளர் படகு மூழ்கி 20 பேர் பலி

துனீசிய கடற்கரைக்கு அப்பால் மத்தியதரைக் கடலில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

துனீசிய கடலோரக் காவல் படையினரால் உடல்கள் மீட்கப்பட்டு கரையோர நகரான ஸ்பெக்ஸ் நகருக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. மேலும் 20 பேர் தொடர்ந்தும் காணாமல்போன நிலையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இத்தாலியை அடைய முயற்சித்த இந்தப் படகில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த 45 பேர் வரை இருந்துள்ளனர். இவர்களில் ஐவர் மத்திரம் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளனர்.

அதிகம் பேரை ஏற்றி மோசமான நிலையில் இருந்த இந்தப் படகு கடும் காற்றில் சிக்கி மூழ்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைவதற்கு ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் முயல்கின்றனர்.

Sat, 12/26/2020 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை