அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரிகளே சேவை

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரமே சேவையாட்களை இணைத்துக் கொள்ள முடிம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

எனினும் சில மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன், அவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை