கல்முனையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (17) பராமரிப்பற்றுக் கிடக்கும் வெற்றுக் காணிகளையும் பூட்டப்பட்டு கிடக்கின்ற இடங்களையும் குறி வைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கல்முனை சுகாதார பிரிவினரும் கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ. ரிஸ்னியின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அநேகமான வெற்றிக்காணிச் சொந்தக்காரர்களுக்கு முன்னெச்சரிக்கையும் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாரி காலம் என்பதால் இனிவரும் காலங்களிலும் தீவிரமான டெங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தமது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகாவண்ணம் சூழலை சுத்தமாக வைத்திருப்பது தங்களது கட்டாயக் கடமையாகும்.

மீறுவோருக்கு எதிராக பக்கச்சார்பின்றி உடனடியாக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ ரிஸ்னி தெரிவித்தார். 

(பெரியநீலாவணை விசேட நிருபர் - ஏ.எல்.எம். சினாஸ்)

Tue, 11/17/2020 - 18:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை