முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டட் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவருக்கும் இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் அலோசியஸ் கொழும்பு 3இல் அதிசொகுசு தொடர்மாடி ஒன்றைக் கொள்வனவு செய்து அதை நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிடம் கொடுத்தது குறித்து குற்றம் சாட்டப்பட்ட வழக்கு தொடர்பாகவே நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி விடுத்திருந்தார்.
Wed, 11/18/2020 - 06:00
from tkn