அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு

அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ , அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வு, கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.

தங்கல்லை பொலொம்மாறுவ புரான வனவாசி, குடா விகாரையின் விகாராதிபதியினால் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர ஆகியோரும் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

 

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை