இலங்கையில் 35ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
இன்று (08) இரவு 9.00 மணியளவில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த 78 வயதான ஆண் ஒருவருக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது மரணத்திற்கான காரணமாக, கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 11/08/2020 - 21:54
from tkn