பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்த

யோஷித்த ராஜபக்‌ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். யோஷித்த ராஜபக்‌ஷ கடந்த செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிலையில் கடந்த 13 ஆம் திகதி பதில் சீன தூதுவர் யோசித்த ராஜபக்‌ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அண்மையில் இலங்கை வந்த சீனக் குழுவின் விஜயம் தொடர்பிலும் இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை