கொழும்பின் 5 பிரதேசங்களில், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட, கொரோனா இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டி பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தின 19 பொலிஸ் பிரிவுகளில் படிப்படியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கம்பஹா மாவட்டம் முழுவதும் நேற்று (21) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அத்துடன், களுத்துறையில் அகலவத்தை, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 5 கிராமசேகவர் பிரிவுகள், நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
from tkn