பிரதான வீதியில் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு தடை

கினிகத்தேன - கொழும்பு

கினிகத்தேன - கொழும்பு பிரதான வீதியின் ரம்பதெனிய பகுதியில் நேற்றுக் காலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ள நிலையில் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைபட்டதோடு நேற்று மாலை வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில கற்பாறைகள் சரியக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கற்பாறையை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை ஹற்றனிலிருந்து கொழும்பு செல்லும் அதேபோல கொழும்பில் இருந்து ஹற்றன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி கலுகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான வீதியையும், தியகல, நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

ஹற்றன் விசேட நிருபர்

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை