சினேகபூர்வ உதைபந்தாட்டப்போட்டி

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழக்திற்கும் காத்தான்குடி பதுறியா அணிகளுக்குமிடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்டப்போட்டி ஏறாவூர் அஹமட் பரீட் பொது மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது 2 க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி வெற்றிபெற்றது.

காத்தான்குடி அணியின் எம். றிபாய் ஒருகோளை அடித்தார். ஏறாவூர் அணியின் எம்எஸ். இஸ்ஸதீன் மற்றும் எம்.எச்.எம். முஹர்ரம் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

லக்கி ஸ்டார் தலைவர் எம்எச்எம். மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் முதல்வர் எம்.ஐ.எம். தஸ்லிம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மூன்று பாதணிகளை அடையாளச்சின்னமாக வழங்கினார்.

ஏறாவூர் குறூப் நிருபர்

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை