திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் சொகுசு காரொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது.
சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதி வீதியோரத்திலிருந்த மின்கம்பத்திலும் மோதி அதனை சேதப்படுத்தியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த நடராசா அனுஷாந்தன் (31) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn