தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் நேற்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். திலீபனின் 33ஆவது நினைவு தினம் நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது நினைவு தினத்தை அனுஷ்டிக்க பொலிஸார் யாழ் நீதிமன்றத் தில் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் உள்ள சிறி சபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போதே, கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக அறிய வருகிறது.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
Wed, 09/16/2020 - 06:00
from tkn