தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம்; UNP, அபே ஜனபல கட்சி இழுபறி நிலைக்கு முடிவில்லை

புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை கூடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்லும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமலுள்ளது.  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சிகளின் வேட்பாளர்களின்  பெயர்களே இதுவரையில் உறுதி செய்யப்படாமல் உள்ளன. 

இந்நிலையில், நாளை 20ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், தேசிய பட்டியல் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.  இந்நிலையில், அபேஜன பல கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் இறுதி தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது.

Wed, 08/19/2020 - 11:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை