போலி ஆவண வழக்கு; சஷி வீரவன்சவுக்கு பிடியாணை

போலி ஆவண வழக்கு; சஷி வீரவன்சவுக்கு பிடியாணை-Passport Obtained Using Fake Document Case-Arrest Warrant Issued-Shashi Weerawansa

போலி ஆவண வழக்கு தொடர்பாக, சஷி வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியமை தொடர்பில் விமல் வீரவன்சவின் மனைவியான, சஷி வீரவன்சவுக்கு இவ்வாறு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான சஷி வீரவன்ச மன்றில் முன்னிலையாகாதா நிலையில், நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

Tue, 07/21/2020 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை