கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடற்படையினர் சகலருக்கும் பூரண சுகம்

906 வீரர்களுக்கு இருவார காலம் சுய தனிமைப்படுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் அனைவரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் இனி வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் எவரும் கிடையாது எனவும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான தேசிய மையம் தெரிவித்தது.

கடற்படையினர் 906 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டிருந்த நிலையில் அவர்கள் பல்வேறு வைத்தியசாலைகளிலும் மருத்துவக் கண்காணிப்புக்கு  உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றோடு அனைவரும் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக அந்த மையம் தெரிவித்தது.

முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கடற்படை வீரர் வெலிசறை கடற்படை முகாமில் இனம் காணப்பட்டதுடன் இறுதியாக மூன்று கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று அவர்கள் பூரண சுகமடைந்து வெளியேறியுள்ளனர் என்றும் அந்த மையம் தெரிவித்தது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை