வெளிநாடுகளிலிருந்து ஒரு குழுவினர் இன்று (24) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக, கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கட்டார் நாட்டின் டோஹா நகரிலிருந்து 13 பேரும், இந்தியாவின் சென்னையிலிருந்து 30 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரையும், முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Fri, 07/24/2020 - 10:32
from tkn