கற்பிட்டியில் 1,156 கி.கி. பீடி இலைகளுடன் 8 பேர் கைது

கற்பிட்டி பிரதேசத்தில் 1,156 கிலோகிராம் பீடி இலைகளுடன் 08 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (22) இக்கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பலடி கடற்கரை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 1,156 கிலோகிராம் பீடி இலை மற்றும் ஒரு படகு, 02 லொறிகளுடன் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலேவெல மற்றும் தலவில பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (23) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thu, 07/23/2020 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை