வவுனியா பௌத்த தேரர் வெளிப்படுத்திய முன்மாதிரி

மனிதாபிமான செயலுக்காக பாராட்டு

வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க பௌத்த தேரர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காயமடைந்த நபர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எவரும் முன்வரவில்லை.இந்நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்.

தேரர் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை