இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து

இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களுக்கான விடுமுறைகள் நேற்று முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் சிறந்த பஸ் சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் ஏ.எச்.பமுனுக தெரிவித்தார்.

தற்போது பதினெட்டாயிரம் பஸ் சாரதிகளும் நடத்துநர்களும்  சேவையில் உள்ளதாக தெரிவித்த அவர் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கமையவே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/27/2020 - 08:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை