வீரவில, பிரபோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) மாலை, குறித்த பகுதியில் ஒரு குழுவினரால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுமி ஒருவரே கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவர்கள் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து, பிரபோதகம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய கணவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்யும் முகமாக வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
from tkn