எரிவாயு கசிவு; எரிகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

மீகஹதென்ன, பஹல ஹேவிஸ்ஸ தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு (29) எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் எரிகாயமடைந்ததை தொடர்ந்து, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Sat, 05/30/2020 - 13:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை