178 பேருடன் விசேட விமானம் மலேசியாவிலிருந்து வருகை

இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் கோலாலம்பூர் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (10) மாலை வந்தடைந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 315 எனும் விசேட விமானம், பயணிகளுடன் இன்று மாலை 4.12 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு, இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, இப்பயணிகளுக்கு  விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் விசேட பஸ் வண்டியொன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 

Sun, 05/10/2020 - 17:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை