சீனாவில் துக்கதினம் அனுஷ்டிப்பு

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சீனா இன்று (04) தேசிய துக்கதினத்தை அனுஷ்டித்துள்ளது.

இன்றையதினம் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அந்நாட்டில் 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு பொதுமக்கள் தாம் இருக்கின்ற இடங்களில் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஒலி எழுப்பி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த  டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக் காரணமாக அந்நாட்டில் சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளதோடு, உலகின் முதல் கொரோனா நோயாளி வூஹான் நகரில் பதிவாகியிருந்தார்.

Sat, 04/04/2020 - 13:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை