இந்தியாவில் சிக்கிய மற்றுமொரு குழு இன்று நாடு திரும்பும்

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 124 பேரை அழைத்து வருவதற்காக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானமொன்று இன்று (28) காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.

இன்று காலை 9.10 மணியளவில், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 1172 எனும் விமானம், பெங்களூர் நகருக்கு புறப்பட்டுள்ளது. 

இதில் விமான சேவை பணியாளர்கள் 08 பேர் பயணித்துள்ளதோடு, குறித்த விமானம் இன்று பகல் 12.55 மணியளவில் இலங்கையை மீண்டும் வந்தடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tue, 04/28/2020 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை