கசிப்பு மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேரை நோர்வூட் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் இவர்களை ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் இன்ஜஸ்ரி தோட்டத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நான்கு நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இன்ஜஸ்ரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துடன், சம்பளம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹட்டன் விசேட நிருபர்)
from tkn