உயிரிழந்த 4ஆவது நபர் இரத்மலானையை சேர்ந்தவர்

கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்று (02) உயிரிழந்த 58 வயதான நான்காவது நபர், இரத்மலானையை வசிப்பிடமாக கொண்டவர் என்பதோடு, அவரது இறுதிக்கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன. 

அண்மையில் தனது மனைவியுடன் இந்தியாவிற்கு சென்றிருந்த 58 வயதான குறித்த நபர்,  கடந்த 16ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (02) உயிரிழந்துள்ளார். 

அத்தோடு அவரது மனைவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

Fri, 04/03/2020 - 12:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை