கொழும்பு 14 மாதம்பிட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு தலா ஒரு வீட்டுக்கு ரூபா 2,000 வீதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாதம்பிட்டியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்த கொரோனா நிவாரண உதவிகள் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இன, மத வேறுபாடின்றி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 குடுப்பங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களால் இவ்வுதவித் தொகை அன்பளிப்புச் செய்யப்பட்டது.
Thu, 04/16/2020 - 14:15
from tkn