தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச் சட்டம், கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, இன்று (07) காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான கடந்த 06 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 73 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
from tkn