கடந்த வருடம் (2019) இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அத்தோடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Mon, 03/30/2020 - 15:28
from tkn