ஹொரணை, இலிம்ப பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை, இலிம்ப பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலிம்ப –கந்தான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டிச் சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் ஹொரண பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tue, 02/25/2020 - 09:43
from tkn