சைப்பிரஸில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் தெனியாய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கைது நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.
மாத்தறையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவருக்கு, சைப்பிரஸில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேகநபர், அவரிடமிருந்து 80,000 ரூபாவை பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் தெனியாய பொலிஸாருக்கு கிடைத்த 18 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபரை இன்று (20) மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
from tkn