தெற்கு அதிவேக வீதியின் மற்றுமொரு பகுதி 23இல் திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்கல் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமான மாத்தறை, கொடகம முதல் பரவகும்புக வரையான வீதி எதிர்வரும்  23ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த வீதியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையின் கீழ் திறந்து வைக்கப்படவுள்ளது.

05 இடைப்பரிமாற்றத்தை கொண்ட இவ்வீதியின் முழு நீளமும் 56 கிலோமீற்றர்களாகும்.

கொடகம பாலட்டுவ, அபரெக்க, பெலிஅத்த, கசாகல மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடைபரிமாற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாத்தறை கொடகம முதல் பரவகும்புக வரையான குறித்த அதிவேக வீதியானது இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

 

Thu, 02/20/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை