காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.

27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் கொழும்பு சிறையில் மரணமடைந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தியேற்றி ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர். இவருக்கு நடந்தது போல் நடக்காது எமது பிள்ளைகள் எமக்கு கிடைக்க வேண்டுமென கோரி காணாமற்போன உறவுகள் தமது பிள்ளைகளுடன் ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை மேற்கொண்டனர். அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா விசேட நிருபர்

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை