72 ஆவது சுதந்திர தினம்

தேசிய கொடிகளை பறக்க விடுங்கள்

 நாட்டின் 72 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி நாடளாவிய அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் வீடுகளில் மரக் கன்றுகளை நடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முன்னோடி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 31ஆம் திகதியும் பெப்ரவரி மாதம் முதலாம் 2ஆம், 3ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக விசேட வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை