கலிபோர்னிய வீட்டில் சூடு: நான்கு பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டு குறைந்தது 5 பேர் காயமடைந்தனர்.

குடும்பத்தினரும் நண்பர்களும் கால்பந்து போட்டியை காண வீட்டில் கூடியபோது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. சத்தம் கேட்டவுடன் அண்டை வீட்டினர் உதவிக்கு விரைந்தனர்.

சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து ஓட்டம்பிடித்தார். கண்காணிப்புக் கேமராவில் அந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதா என்பதை பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் 25–30 வயது கொண்ட நான்கு ஆண்கள் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஐவர் உயிராபத்து இன்றி துப்பாக்கிக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது அங்கு பல சிறுவர்கள் உட்பட 35 தொடக்கம் 40 பேர் வரை இருந்துள்ளனர். சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் வீட்டுக்கு வீடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை