ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க

சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் (25) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊடகத் துறையில் நான்கு தசாப்தகால அனுபவத்தைக் கொண்டுள்ள மொஹான் சமரநாயக, “தவச” செய்திப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஊடகத்

துறைக்குள் பிரவேசித்தார். அதன் பின்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உதவி ஆசிரியராக சேவையாற்றிய அவர், பின்னர் ஐந்து வருடகாலமாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் பதவியை வகித்தார். அதன் பின்னர், கொழும்பு ஐ.நா. தகவல் மையத்தின் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். மொஹான் சமரநாயக ஜனாதிபதியின் பேச்சாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

 

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை