பிலிப்பைன்சில் உள்ள மிண்டானாவ் தீவில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவு, கொட்டபேட்டோ, கிடுபாவன் உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 8 ஆக நில அதிர்வு பதிவானதில், கட்டடங்கள் பல குலுங்கின.
திடீர் அதிர்வை கண்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதில் ஹோட்டல், அலுவலக கட்டடங்கள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கடுமையான நிலஅதிர்வு உணரப்படுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை மிண்டானாவ் தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
from tkn