கோட்டாபயவின் வெற்றி எமக்கு கிடைத்த வெற்றி

சகல சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பணியாற்றுவார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். அதேவேளை,

சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை. என்றாலும், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சகல மக்களையும் சரிசமமாகக் கருதி, அனைவரையும் அரவணைத்துப் பணியாற்றுவார் என்ற நம்பிக்ைக தமக்கிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் பணியாற்றும் நிறுவனமாகும் என்று தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான் எம்.பி., எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து மக்களுக்குப் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.

விசு கருணாநிதி

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை