ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.கா. கோட்டாபயவுக்கு ஆதரவு

ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் முடிவு

2019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று (13) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இதனை அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (13) காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)

Sun, 10/13/2019 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை