சைபீரியாவில் அணை உடைந்து 15 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரியத் தங்கச் சுரங்கத்திலுள்ள சிறிய அணை உடைந்து வெள்ளம் புகுந்து குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை அதிகாரிகள் தற்போது தேடிவருகின்றனர். செய்பா ஆற்றில் உள்ள அந்த அணை, பெய்த கனத்த மழை காரணமாய் உடைந்ததாகக் கூறப்பட்டது.

மீட்கப்பட்டவர்களில் 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் பாதுகாப்புக் குறித்துத் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை