கிளி. முல்லைத்தீவு மாவட்டங்களில் 150 ஏக்கர் காணி விடுவிப்பு

இராணுவத் தளபதியினால் நேற்று கையளிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளே இவ்வாறு உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டன. கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விடுவிக்கப்பட்ட காணிகளை உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளித்தார். காணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோர் ஒப்பமிட்டு காணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.

கிளிநொச்சி இராணுவத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பரந்தன் குறூப் நிருபர்

Sat, 10/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை